Skip to main content
சீறிப் பாய்ந்தது செல்லமாக வளர்க்கப்பட்ட சிங்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீறிப் பாய்ந்தது செல்லமாக வளர்க்கப்பட்ட சிங்கம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் சிங்கத்தின் பிடியில் சிக்கிய மூவர் காயமடைந்தனர்.

சுவரைத் தாண்டி அதிவேகமாக வந்த சிங்கம் பெண்ணை நோக்கிப் பாயும் காட்சிகள் இணையத்தில் பரவுகின்றன.

தாக்குதலில் 2 பிள்ளைகளும் காயமுற்றதாகக் காவல்துறை கூறியது.

இம்மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவு நடந்த சம்பவத்தின் கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் காவல்துறை வெளியிட்டது.

காயமடைந்தோரின் நிலை சீராக இருப்பதாய் அதிகாரிகள் கூறினர்.

தப்பித்த சிங்கம் வனவிலங்குத் துறையின் பிடியில் மாட்டியது.

உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சிங்கம், புலி போன்ற வனவிலங்குகள் பாகிஸ்தானில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்