அமெரிக்கா விதித்த வரிகளால் மலேசிய பகுதி மின்கடத்தித் துறை பாதிக்கப்படுமா?
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: REUTERS/Florence Lo/Illustration)
அமெரிக்கா விதிக்கும் வரிகள் மலேசியாவின் பகுதி மின்கடத்தித் துறையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
உலகின் பகுதி மின்கடத்தி உற்பத்தியில் மலேசியா முக்கியப் பங்காற்றுகிறது.
மலேசியா தனது நிலையை மேம்படுத்தத் தீவிரமாகச் செயல்பட வேண்டும், நவீனச் சில்லுகளை வடிவமைத்துத் தயாரிப்பதில்
கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பகுதி மின்கடத்தி, வேறு சில மின்னியல் பொருட்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து மலேசிய ஏற்றுமதிகளுக்கும் அமெரிக்கா 24 விழுக்காட்டு வரி விதித்திருந்தது.
மலேசியாவின் மொத்த ஏற்றுமதியில் பகுதி மின்கடத்தித் துறையின் பங்கு 60 விழுக்காடு.
அந்தத் துறை மீதான அமெரிக்காவின் வரியால் மலேசியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடும்.
மலேசியாவின் மின்கடத்தித் துறையில் பல அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டிரம்ப் நிர்வாத்திடமிருந்து அவை கடும் நெருக்குதலைச் சந்திக்கின்றன.
இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் பகுதி மின்கடத்தித் துறைச் சங்கத்தின் தலைவர் வோங் சியூ ஹாய்.
துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்தி மற்றவர்களை விட ஒரு படி மேலே இருப்பது அவசியம் என்றார் அவர்.
மலேசியா பொருளாதாரப் பாதிப்பைத் தவிர்க்க இரண்டு மாதத்துக்குள் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.
உலகின் பகுதி மின்கடத்தி உற்பத்தியில் மலேசியா முக்கியப் பங்காற்றுகிறது.
மலேசியா தனது நிலையை மேம்படுத்தத் தீவிரமாகச் செயல்பட வேண்டும், நவீனச் சில்லுகளை வடிவமைத்துத் தயாரிப்பதில்
கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பகுதி மின்கடத்தி, வேறு சில மின்னியல் பொருட்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து மலேசிய ஏற்றுமதிகளுக்கும் அமெரிக்கா 24 விழுக்காட்டு வரி விதித்திருந்தது.
மலேசியாவின் மொத்த ஏற்றுமதியில் பகுதி மின்கடத்தித் துறையின் பங்கு 60 விழுக்காடு.
அந்தத் துறை மீதான அமெரிக்காவின் வரியால் மலேசியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடும்.
மலேசியாவின் மின்கடத்தித் துறையில் பல அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டிரம்ப் நிர்வாத்திடமிருந்து அவை கடும் நெருக்குதலைச் சந்திக்கின்றன.
இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் பகுதி மின்கடத்தித் துறைச் சங்கத்தின் தலைவர் வோங் சியூ ஹாய்.
துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்தி மற்றவர்களை விட ஒரு படி மேலே இருப்பது அவசியம் என்றார் அவர்.
மலேசியா பொருளாதாரப் பாதிப்பைத் தவிர்க்க இரண்டு மாதத்துக்குள் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஆதாரம் : Others