Keadilan கட்சித் தலைவர் பதவி - அன்வார் இப்ராஹிமை எதிர்த்துப் போட்டியில்லை
வாசிப்புநேரம் -

படம்: Facebook/Fahmi Fadzil
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவரது Keadilan கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
கட்சித்தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும்.
துணைத் தலைவர் பதவிக்கு உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) போட்டியிடவில்லை. மூவாண்டுக்கு முன்னர் நடந்த தேர்தலில் அவர் திரு ரஃபிஸி ரம்லியுடம் தோல்வி கண்டார்.
பொருளாதார அமைச்சர் ரஃபிஸி துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துத் திரு அன்வாரின் மகள் திருவாட்டி நூருல் இஸ்ஸா (Nurul Izzah) போட்டியிடவிருக்கிறார்.
Keadilan கட்சி விதிப்படி தலைவர் இரண்டு தவணைக்குப் பிறகு பதவியில் நீடிக்க முடியாது என்பதால் துணைத் தலைவராக வெற்றிபெறுபவர் பின்னர் கட்சித் தலைவாரார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.
கட்சித்தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும்.
துணைத் தலைவர் பதவிக்கு உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) போட்டியிடவில்லை. மூவாண்டுக்கு முன்னர் நடந்த தேர்தலில் அவர் திரு ரஃபிஸி ரம்லியுடம் தோல்வி கண்டார்.
பொருளாதார அமைச்சர் ரஃபிஸி துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துத் திரு அன்வாரின் மகள் திருவாட்டி நூருல் இஸ்ஸா (Nurul Izzah) போட்டியிடவிருக்கிறார்.
Keadilan கட்சி விதிப்படி தலைவர் இரண்டு தவணைக்குப் பிறகு பதவியில் நீடிக்க முடியாது என்பதால் துணைத் தலைவராக வெற்றிபெறுபவர் பின்னர் கட்சித் தலைவாரார்.
ஆதாரம் : AGENCIES