Skip to main content
ஆடவரைத் தாக்கிய சிங்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆடவரைத் தாக்கிய சிங்கம் - கற்களை விட்டெறிந்த கிராமவாசிகள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சிங்கம் ஒன்று ஆடவரைத் தாக்கியுள்ளது.

அதைக் கண்டு பதறிய கிராமவாசிகள் கற்களை விட்டெறிந்து ஆடவரைக் காப்பாற்ற முயன்றனர்.

சிங்கம் ஆடவரைத் தரையில் வீழ்த்தி அவரைக் கடித்ததாகத் தெரிகிறது.

கடுமையாகக் காயமடைந்த ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடந்தது.

ஆடவர் மாடு மேய்ப்பவர் என்று சொல்லப்பட்டது.

அவர் வீட்டில் இருந்தபோது சிங்கம் திடீரென்று அவரைத் தாக்கியது.

கேமராவில் பதிவான அந்தக் காட்சி இணையத்தில் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

அவர்கள் சிங்கத்தைத் தேடிப் பிடிக்க முயல்கின்றனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்