''என் மனைவியைக் கொலை செய்யவில்லை'' - பிரிட்டனில் சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளாத சிங்கப்பூரர்
பிரிட்டனில் மனைவியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கப்பூரரான ஃபோங் சூங் ஹெர்ட் (Fong Soong Hert) என்ற 50 வயது ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
சென்ற ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று காலை 7.15 மணியளவில் பெக் யிங் லிங் (Pek Ying Ling) என்ற 51 வயதுப் பெண் மூச்சின்றிக் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் அவசரச் சேவை ஊழியர்கள் அவருக்குச் சிகிச்சை வழங்கினர். எவ்வளவு முயன்றும் பலனில்லை.
விசாரணையில் அவரது கணவரான ஃபோங் அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் நியூகாசலில் இருந்த அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணையின் முதற்கட்டம் அடுத்த மாதம் 28ஆம் தேதி இடம்பெறும். பின்னர் ஜூன் மாதம் 6ஆம் தேதி விசாரணை தொடரும்.
ஃபோங் அதுவரை தடுப்புக்காவலில் இருப்பார்.