மலேசியா: கூரை மீது நின்று அட்டூழியம் செய்த ஆடவர் கைது
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
மலேசியாவில் கூரை மீது நின்று அட்டூழியம் செய்த ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றிரவு நடந்ததாக Malaymail செய்தி நிறுவனம் சொன்னது.
48 வயது ஆடவர் வேறு பகுதியைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
அரை நிர்வாணமாகக் கூரை மீது நின்ற ஆடவர் கத்தியைச் சுழற்றியதாகச் சொல்லப்பட்டது.
நான்கு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து கத்தியைப் பறிமுதல் செய்ததாக Malaymail கூறியது.
அவருக்கு மனநலச் சிக்கல் இருப்பதாக நம்பப்படுகிறது.
அவர் மருத்துவ ஆலோசனையை நாடுமாறு பரிந்துரைக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரி கூறினார்.
போதைப்புழக்கம் உட்பட ஆடவர் மீது 26 குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாகக் காவல்துறை சொன்னது.
சம்பவம் குறித்து விசாரணை தொடரும்.