அமெரிக்காவில் 100 குரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து - 3 குரங்குகள் தப்பின
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் 100 குரங்குகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.
அதிலிருந்து தப்பிய 3 குரங்குகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை.
நேற்று (21 ஜனவரி) மதியம் மோன்டோர் கௌன்டியில் (Montour County) குரங்குகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியது.
விலங்குகள் இருந்த வாகனம் ஓர் ஆய்வுக்கூடத்திற்குச் சென்றுகொண்டிருந்தது.
குரங்குகளைப் பிடிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினர்.
வாகனத்தில் எந்த வகையான குரங்குகள் இருந்தன என்பது தெரியவில்லை.
ஆரம்பத்தில் 4 குரங்குகள் தப்பின. பிறகு அவற்றில் ஒன்று மரத்தில் இருக்கும் புகைப்படத்தைக் காவல்துறை வெளியிட்டது.
விபத்தில் சிக்கிய மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் காயம் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.