பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவுப் போராட்டம் - 240 பேர் கைது
(படம்: Asif HASSAN / AFP)
This audio is generated by an AI tool.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைச் (Imran Khan) சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் 240க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரு கானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கராச்சியில் (Karachi) போராட்டம் நடத்தினர்.
கானின் PTI கட்சியின் ஆதரவாளர்களைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியது.
சில போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படைகள் மீது கல்லெறிந்தனர்.
திரு கான் சிறைவைக்கப்பட்டு ஈராண்டு ஆனதைக் குறிக்கும் வகையில் லாகூரிலும் (Lahore) பேரணி நடத்தப்பட்டது.
தலைநகர் இஸ்லாமாபாத்திலும் திரு கான் சிறை வைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டியிலும் (Rawalpindi) மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.