கிரீன்லந்துக்கு நேட்டோ படை
This audio is generated by an AI tool.
கிரீன்லந்திலும் ஆர்ட்டிக் வட்டாரத்திலும் நேட்டோ கூட்டணியின் படைகளை நிறுத்தும் சாத்தியம் குறித்து டென்மார்க்கும் கிரீன்லந்தும் கலந்து பேசியுள்ளன.
அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் டென்மார்க் ஆர்ட்டிக் வட்டாரத்திற்குக் கூடுதல் படையினரை அனுப்பியுள்ளது.
அந்தத் தகவலை டென்மார்க் தற்காப்பு அமைச்சர் டிரோல்ஸ் லுண்ட் போல்சன் (Troels Lund Poulsen) வெளியிட்டார்.
நேட்டோ கூட்டணியின் தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டருடனும் (Mark Rutte) கிரீன்லந்தின் வெளியுறவு அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட்டுடனும் (Vivian Motzfeldt) நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பிறகு அவர் பேசினார்.