'மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி' - குற்றஞ்சாட்டிய மலேசியப் பிரதமர் மீது வழக்கு
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) மீது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் டயிம் ஸைனுடினின் (Daim Zainuddin) குடும்பத்தார் வழக்குத் தொடுத்துள்ளனர்.
மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் தேசிய நிலைத்தன்மையைக் கீழறுக்கவும் சதிவேலை நடப்பதாகச் சந்தேகிப்பதாய் மலேசியக் காவல்துறை சென்ற வாரம் தெரிவித்தது.
யாரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
எனினும் தங்கள் மீது விசாரணை நடத்தப்படுவதாக டயிம் குடும்பத்தார் கூறினர்.
தலைவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாய் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் பிரதமர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் மீதும் அரசாங்கம் மீதும் அவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.