மியன்மாரில் தேர்தல் வருகிறதா?
AFP
This audio is generated by an AI tool.
மியன்மார் ராணுவம் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஆண்டிறுதிக்குள் கட்டாயம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அது உறுதி கூறியது.
ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
3,700க்கும் மேற்பட்டோரை நிலநடுக்கம் பலிவாங்கியது.
உதவிகள் சென்று சேர்வதற்காகவும், மறுசீரமைப்புப் பணிகளைச் செய்வதற்காகவும் சண்டை நிறுத்தம் பிறப்பிக்கப்பட்டது.
இருந்தபோதும் 100க்கும் மேற்பட்ட ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
200க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தற்போது அமைதி தேவைப்படுவதாகக் கூறுகிறது ராணுவ அரசாங்கம்.