Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின் முதன்முறையாக நெருக்கடி நிலையை அகற்றிய மியன்மார்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மியன்மார் ராணுவ அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின் முதன்முறையாக நெருக்கடி நிலையை அகற்றியிருக்கிறது.

அரசாங்கத்தில் 2 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒன்று திரு நியோ சோ (Nyo Saw) தலைமையிலான மத்திய அரசாங்கம். ராணுவத் தலைவர் மின் ஆங் லைனின் (Min Aung Hlaing) நம்பிக்கைக்குரிய ராணுவத் தளபதி அவர்.

நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பொறுப்பு வகிக்கும் புதிய ஆணையம் அமைக்கப்படுகிறது. அதற்கு ராணுவத் தலைவர் தலைமை தாங்குவார்.

2021ஆம் ஆண்டு மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்