சண்டை நிறுத்தத்தை ஏற்கக்கூடும்: ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர்
வாசிப்புநேரம் -

Reuters
ஹிஸ்புல்லா (Hezbollah) கிளர்ச்சிக் குழுவின் புதிய தலைவர் நயிம் காசிம் (Naim Qassem) லெபனானில் சில நிபந்தனைகளின்கீழ் சண்டை நிறுத்தத்திற்கு இணங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை சண்டை நிறுத்தம் பற்றிப் பேசுவதற்குக் கூடியதை அடுத்து அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அங்கே இன்னொரு மூத்த தளபதியைப் படுகொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் சொல்கிறது.
கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நீண்டகாலத் தலைவர் ஹஸான் நஸ்ரல்லா (Hassan Nasrallah) கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து புதிய தலைவர் நயிம் காசிம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
அமைப்பின் திட்டங்களைத் தொடரவிருப்பதாக அவர் கூறினார் .
இஸ்ரேலின் ஆகாய, நிலத் தாக்குதல்களை முறியடிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
அதே நேரத்தில் நிபந்தனைக்கு உட்பட்ட சண்டை நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும் நயிம் காசிம் கூறினார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை சண்டை நிறுத்தம் பற்றிப் பேசுவதற்குக் கூடியதை அடுத்து அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து லெபனானில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அங்கே இன்னொரு மூத்த தளபதியைப் படுகொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் சொல்கிறது.
கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நீண்டகாலத் தலைவர் ஹஸான் நஸ்ரல்லா (Hassan Nasrallah) கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து புதிய தலைவர் நயிம் காசிம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
அமைப்பின் திட்டங்களைத் தொடரவிருப்பதாக அவர் கூறினார் .
இஸ்ரேலின் ஆகாய, நிலத் தாக்குதல்களை முறியடிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
அதே நேரத்தில் நிபந்தனைக்கு உட்பட்ட சண்டை நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும் நயிம் காசிம் கூறினார்.
ஆதாரம் : Others