Skip to main content
பாகிஸ்தான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் சண்டை - பலர் மரணம்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இன்று (15 அக்டோபர்) நடந்த சண்டையில் பல ராணுவ வீரர்களும் பொதுமக்களும் மாண்டனர்.

சென்ற வாரயிறுதியின்போதும் இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது.

2021ஆம் ஆண்டு தலிபான் அமைப்பு காபூலை மீண்டும் கைப்பற்றியதற்குப் பின்னர் நடந்த ஆக மோசமான சண்டை இது.

சுமார் 100 பேர் காயமுற்றதாகத் தலிபான் கூறியிருக்கிறது.

பாகிஸ்தான் இன்று அதிகாலை ஸ்பின் போல்டாக் (Spin Boldak) பகுதியில் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்