துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மாண்ட நியூ யார்க் காவல் அதிகாரி
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் குடும்பப் பிரச்சினை குறித்த அழைப்பை ஏற்று உதவச்சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று (21 ஜனவரி) இரவு கொல்லப்பட்டார்.
மற்றோர் அதிகாரி படுகாயம் அடைந்தார்.
ஹார்லம் (Harlem) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரும் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மகனுக்கு உதவி கேட்டு ஒரு தாய் காவல்துறையை அழைத்தார்.
அந்தக் குடும்பச் சர்ச்சையை விசாரிக்க மூன்று காவல்துறை அதிகாரிகள் சென்றிருந்தனர்.
தாயிடம் பேசிய பின்னர், அவரின் மகன் இருக்கும் அறைக்கு இரு அதிகாரிகள் சென்றனர்.
அப்போது துப்பாக்கிச் சூடு நடந்தது.
சம்பவத்திற்குப் பின் அவ்விரு அதிகாரிகளும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
நான்கு நாள்களில் மூன்றாவது முறையாக இத்தகைய சம்பவம் அங்கு நடந்துள்ளது.