Skip to main content
பாகிஸ்தான் வான்வெளியில் நாளை வரை விமானங்கள் பறக்கத் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாகிஸ்தான் வான்வெளியில் நாளை வரை விமானங்கள் பறக்கத் தடை

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

ஆகாயப்படைத் தளங்கள் மீது இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அம்முடிவு எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் கூறியிருக்கிறது.

பாகிஸ்தான் வான்வெளி நாளை நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அது அறிவித்தது.

இதற்கிடையே, இந்தியாவில் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பதான்கொட் (Pathankot), உதம்பூர் (Udhampur) பகுதிகளில் அமைந்துள்ள ஆகாயப்படைத் தளங்களைத் தாக்கியதாகப் பாகிஸ்தான் சொன்னது.

தனது 3 ஆகாயப்படைத் தளங்களை இந்தியா தாக்கியதால் பதிலடி கொடுத்ததாகச் சொல்கிறது பாகிஸ்தான்.

இந்தியா மீதான பதிலடித் தாக்குதலுக்கு புன்யானுன் மர்சூஸ் (Bunyan-un-Marsoos) என்று பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்