பாகிஸ்தான் தாக்குதல் - இந்தியா காரணமா?
This audio is generated by an AI tool.
பலுசிஸ்தான் வன்முறை தொடர்பான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாநிலம் பலுசிஸ்தான். அதன் தலைநகரான குவெட்டாவில் (Quetta) சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 200 பேர் மாண்டனர்.
சுமார் 10 நகரங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதில் தனக்குத் தொடர்பு இருப்பதாய்ப் பாகிஸ்தான் கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்கிறது இந்தியா.
உள்நாட்டுப் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காகப் பாகிஸ்தான் அவ்வாறு சொல்வதாகவும் இந்தியா சாடியது.
தடை செய்யப்பட்ட பலுச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
பிரிவினைவாதிகளை ஒடுக்கப் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமான நடவடிக்கை எடுத்தது.
40 மணிநேரம் நீண்ட போராட்டத்தில் 145க்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.