Skip to main content
இந்தியாவிற்குப் பதிலடி தந்ததாகச் சொன்னது பாகிஸ்தான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவிற்குப் பதிலடி தந்ததாகச் சொன்னது பாகிஸ்தான்

வாசிப்புநேரம் -
இந்தியாவிற்குப் பதிலடி தந்ததாகச் சொன்னது பாகிஸ்தான்

(படம்: AFP/Sajjad QAYYUM)

பாகிஸ்தான் இந்தியாமீது பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பதாங்கொட் (Pathankot), உதம்பூர் (Udhampur) பகுதிகளில் அமைந்துள்ள ஆகாயப்படைத் தளங்களைத் தாக்கியதாகப் பாகிஸ்தான் சொன்னது.

பாகிஸ்தான் அதன் 3 ஆகாயப்படைத் தளங்களை இந்தியா தாக்கியதைத் தொடர்ந்து பதிலடி தாக்குதல் மேற்கொண்டதாய்க் கூறியுள்ளது.

இந்தியா மீதான பதிலடி தாக்குதலுக்கு Bunyan-un-Marsoos எனப் பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அது சொன்னது.

காஷ்மீர் பகுதியை ஒட்டியிருக்கும் இரு நாடுகளிடயிலான எல்லைப் பகுதியில் நடைபெற்றுள்ள தாக்குதல்களில் 50க்கும் அதிகமான பொதுமக்கள் மாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்