Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தான் இலங்கைக்குக் காலாவதியானவற்றை நிவாரணப் பொருள்களாக அனுப்பியதா?

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு அனுப்பிய நிவாரணப் பொருள்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

"இலங்கையில் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளன" என்று இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தன்னுடைய X சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தது.

அதில் நிவாரணப் பொருள்களின் படங்களும் இடம்பெற்றன.

ஆனால் பொருள்களின் காலாவதித் தேதிகள் இணையவாசிகளின் கண்களில் சிக்கின.

சில பொருள்களில் "அக்டோபர் 2024" என அச்சிடப்பட்டிருந்தது. அது காலாவதியாகும் தேதியைக் குறிப்பதாகக் கூறப்பட்டது.

அதைப் பற்றி இணையவாசிகள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.

பாகிஸ்தான் காலாவதியான உணவை நிவாரணப் பொருள்களாக அனுப்புவதாக அவர்கள் கூறினர்.

"வீசுவதற்கு பதிலாகப் பாகிஸ்தான் காலாவதியான உணவை இலங்கைக்கு அனுப்புகிறது" என்றார் இணையவாசி ஒருவர்.

அனுப்பப்பட்ட நன்கொடை சரியானதா என்பது பற்றியும் வேறு சில இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்