Skip to main content
"பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை" - பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியது பாகிஸ்தான் படையினரின் பொறுப்பு என்று அந்நாட்டு தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் (Attaullah Tarar) கூறியுள்ளார்.

குடியிருப்புகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.

இந்தியாவின் இராணுவத் தளங்களை மட்டுமே பாகிஸ்தான் குறிவைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்முவில் அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீடுகளும் கார்களும் சேதமுற்றதாக உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலை BBC வெளியிட்டிருந்தது. அதன் தொடர்பில் அமைச்சர் தரார் பேசினார்.

பாகிஸ்தான் அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தி தனது தளங்களை இலக்கு வைத்ததாகவும், படைகளை எல்லைப் பகுதிக்கு அருகே நகர்த்தியதாகவும் இந்தியா இதற்குமுன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்