Skip to main content
"பதிலடிக்காகக் காத்திருங்கள்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"பதிலடிக்காகக் காத்திருங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

வாசிப்புநேரம் -
"பதிலடிக்காகக் காத்திருங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

(படம்: Sajjad HUSSAIN / AFP)

பாகிஸ்தான் அதன் மூன்று ஆகாயப்படைத் தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டிருப்பதாய்க் கூறியுள்ளது.

மூன்று தளங்களில் ஒன்று இஸ்லாமாபாத் ராணுவத் தலைமையகத்துக்கு அருகே புறநகர்ப் பகுதியில் உள்ளது.

பாகிஸ்தான் ராணுவப் பேச்சாளர் அகமது ஷரீஃப் சௌத்ரி (Ahmed Sharif Chaudhry) தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் அது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பதிலடிக்குக் காத்திருக்கும்படி அவர் இந்தியாவை எச்சரித்தார்.

இந்தியா 6 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக அவர் தெரிவித்தார். அவற்றுள் 5 பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைத் தாக்கியதாகத் திரு அகமது கூறினார்.

அமிர்தரசரஸில் உள்ளவர்கள் எச்சரிக்கை ஒலியால் பதற்றமடைய வேண்டாம் என்று வட்டார ஆணையர் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானின் அண்மையத் தகவல் குறித்து இந்தியா இன்னமும் கருத்துரைக்கவில்லை.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்