Skip to main content
"இரக்கமே இல்லையா?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

"இரக்கமே இல்லையா?" - கவிழ்ந்த லாரியிலிருந்து குளிர்பானங்களைத் திருடும் மக்கள்

வாசிப்புநேரம் -
"இரக்கமே இல்லையா?" - கவிழ்ந்த லாரியிலிருந்து குளிர்பானங்களைத் திருடும் மக்கள்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்த லாரியிலிருந்து பொதுமக்கள் குளிர்பானங்களைத் திருடும் காணொளி இணையவாசிகளிடையே கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு உதவாமல் குளிர்பானங்களுக்காக மக்கள் முண்டியடிப்பதை அந்தக் காணொளி காட்டுகிறது.

இந்தச் சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூரில் நடந்ததாக இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த ஓட்டுநர் கெஞ்சுவதைப் பார்த்த பிறகும்கூட மக்கள் குளிர்பானங்களைத் திருடுவதில் மும்முரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

"இந்த அளவுக்கு இரக்கம் இல்லாமல் நடந்துகொள்ள முடிகிறதா?" என்று இணையவாசி ஒருவர் கேட்டிருக்கிறார்.

இந்தக் காணொளி எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றாலும், தற்போது இது பல்வேறு சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சாலையில் குளிர்பானங்கள் சிதறிக் கிடக்க, கவிழ்ந்த லாரியைச் சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணொளி காட்டுகிறது.

தங்களால் முடிந்த அளவுக்கு மக்கள் குளிர்பானங்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர்.

பின்னணியில் ஒருவர் "கொள்ளையடியுங்கள், கொள்ளையடியுங்கள்" என்று கத்துவதும் சிலர் சிரிப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்