Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நாணயங்களை வீசினீர்களா? உங்களுக்கு வாழ்நாள் தடை விதிப்போம்! - ரசிகர்களை எச்சரித்த Liverpool அணி

வாசிப்புநேரம் -

Manchester City காற்பந்து அணியின் நிர்வாகி மீது நாணயங்களை வீசிய ரசிகர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று Liverpool அணி எச்சரித்துள்ளது.

English Premier League போட்டியின் ஓர் அங்கமாக Liverpool அணி, அதன் சொந்த அரங்கமான அன்ஃபீல்டில் (Anfield) Manchester City அணியைச் சந்தித்தது.

Liverpool 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

Manchester City அணி போட்ட ஒரு கோல் நிராகரிக்கப்பட்டபோது ரசிகர்கள், அந்த அணியின் நிர்வாகி பெப் கார்டியோலாவை (Pep Guardiola) நோக்கி நாணயங்களை வீசியதாகக் கூறப்படுகிறது. நாணயங்கள் அவர் மீது விழவில்லை.

இந்நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவித்த Liverpool அணி சம்பவம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகக்  கூறியுள்ளது.

அண்மை ஆண்டுகளாக Manchester City, Liverpool ஆகிய அணிகளுக்கு இடையே போட்டித்தன்மை வலுவடைந்துள்ளது.

ரசிகர்களுக்கு இடையிலும்  பிரச்சினைகள் எழுந்துள்ளன.

லிவர்பூல் அணியின் பயிற்றுவிப்பாளர் Jurgen Klopp, குழுவின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்