Skip to main content
வாசனைத் திரவியக் கிடங்கில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வாசனைத் திரவியக் கிடங்கில் தீ - துருக்கியேவில் 6 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
வாசனைத் திரவியக் கிடங்கில் தீ - துருக்கியேவில் 6 பேர் மரணம்
AFP PHOTO / DHA (Demiroren News Agency)
வெளியீடு : 09 Nov 2025 09:04AM புதுப்பிப்பு : 09 Nov 2025 11:55AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துருக்கியேவின் வட மேற்கே டிலோவசி (Dilovasi) நகரில் தீ விபத்தில் சிக்கி 6 பேர் மாண்டனர். 

வாசனைத் திரவியக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 

சிறிது நேரத்தில் நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்குள் கிடங்கின் இரண்டு மாடிகளும் நாசமாயின. 

தீ அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்கும் பரவியது.

தீ ஏற்பட்டபோது வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். 

மாண்டோரில் 16, 17 வயதுடைய பெண்கள் இருவர் இருந்தனர்.

சம்பவத்தில் ஐவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

வாசனைத் திரவியக் கிடங்கின் உரிமையாளரும் அவரின் மூத்த ஊழியர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தீ பரவியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்