வல்லமை படைத்த நாடுகள் கூறுவதே சரி என்ற போக்கைப் பின்பற்றினால் சிறிய நாடுகள் சிரமங்களை எதிர்நோக்கலாம்: பிரதமர் லீ
பிரதமர் லீ சியென் லூங் ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபைக் கூட்டத்தையொட்டிப் பேசியபோது உலகில் சிறிய நாடுகள் தங்கள் இடத்தை உறுதிசெய்வது இன்னமும் சிரமமாய் இருப்பதாகக் கூறியுள்ளார்.
பாதுகாப்பு, தொடர் இயக்கம் போன்றவற்றுக்குச் சிறிய நாடுகள் பலதரப்பட்ட, விதிகளின் அடிப்படையில் செயல்படும் முறையை நம்பியுள்ளன என்று அவர் பதிவுசெய்யப்பட்ட காணொளிமூலம் மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
தற்போது நடப்பிலுள்ள அனைத்துலகக் கட்டமைப்பில் குறைபாடுகள் இல்லாமல் இல்லையென்றாலும் இதுவரை அதுவே சிறந்த முறையில் செயல்படுகிறது என்றார் அவர்.
"வல்லமை படைத்த நாடுகள் கூறுவதே சரி" என்ற போக்கை உலகம் பின்பற்றினால் சிறிய நாடுகள் பிழைப்பதில் சவால்களை எதிர்நோக்கலாம். அதேவேளையில் பெரிய நாடுகளும் சிரமங்களைச் சந்திக்கக்கூடும் என்றார் திரு லீ.