ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் போர் நிறுத்த உடன்பாடு - அதிபர் டிரம்ப் விருப்பம்
படம்: Reuters
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வரும் ஆறாம் தேதிக்குள் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைச் செய்துகொள்ள விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாகத் திரு டிரம்ப் மிரட்டல் விடுத்த பிறகு வெள்ளை மாளிகை அவ்வாறு கூறியது.
ஈரான் உடன்பாடு செய்துகொள்ளாவிட்டால் அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள், எண்ணெய்க் கிணறுகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியன முற்றாக அழிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்தார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகச் சொன்ன திரு டிரம்ப், உடன்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் ஈரானில் இதுவரை விட்டுவைக்கப்பட்டுள்ள இடங்களை அமெரிக்கா தாக்கும் என்றார்.