ஜகர்த்தாவின் ஆகப் பழைமையான கடைத்தொகுதியில் தீ - 6 பேர் மரணம்; 14 பேரைக் காணவில்லை
வாசிப்புநேரம் -

(படம்: X/@KokohHendry)
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் (Jakarta) இருக்கும் கடைத்தொகுதியில் நேர்ந்த தீச்சம்பத்தில் 6 பேர் மாண்டனர். காணாமல்போன 14 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்நகரின் மிகப் பழைமையான கடைத்தொகுதிகளில் ஒன்று Glodok Plaza.
நேற்று முன்தினம் (15 ஜனவரி) இரவு சுமார் 9.22 மணியளவில் நடந்தது.
அடையாளம் காண்பதற்காக 6 சடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
முந்திய இரவு தொடங்கிய தீ நேற்று காலைதான் (16 ஜனவரி) அணைக்கப்பட்டது.
சூட்டைத் தணிக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களின் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் சுமார் 50 தீயணைப்பு வண்டிகளும் 200 அதிகாரிகளும் ஈடுபட்டதாக Jakarta Post தெரிவித்தது.
அந்நகரின் மிகப் பழைமையான கடைத்தொகுதிகளில் ஒன்று Glodok Plaza.
நேற்று முன்தினம் (15 ஜனவரி) இரவு சுமார் 9.22 மணியளவில் நடந்தது.
அடையாளம் காண்பதற்காக 6 சடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
முந்திய இரவு தொடங்கிய தீ நேற்று காலைதான் (16 ஜனவரி) அணைக்கப்பட்டது.
சூட்டைத் தணிக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களின் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் சுமார் 50 தீயணைப்பு வண்டிகளும் 200 அதிகாரிகளும் ஈடுபட்டதாக Jakarta Post தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES