"பழைய நண்பர்களைக் கண்டதில் மகிழ்ச்சி!" ஆட்டத்தில் 2 கோல்களை அடித்த ரொனால்டோ
வாசிப்புநேரம் -
PSG குழுவிற்கும் அல் நாசர்-அல் ஹிலால் ஆல் ஸ்டார்ஸ் குழுவிற்கும் இடையே இன்று (20 ஜனவரி) நடந்த நட்புமுறை ஆட்டத்தில் PSG குழு 5-4 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சவுதி அரேபிய அணியில் அந்நாட்டின் அல் நாசர் குழுவையும் அல் ஹிலால் குழுவையும் சேர்ந்த விளையாட்டாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் ரொனால்டோவும் ஒருவர்.
PSG அணிக்காக ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தார் காற்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி.
ரொனால்டோ முதல் பாதியில் 2 கோல்களைப் போட்டார்.
ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை PSGயின் எம்பாப்பே கோலாக்கினார்.
போட்டியில் தோல்வியுற்றாலும் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார் ரொனால்டோ.
"மீண்டும் களத்தில் இறங்கி விளையாடியதில் பேரின்பம். எதிரணியில் இருந்த பழைய நண்பர்கள் சிலரைக் கண்டதிலும் மகிழ்ச்சி" என ரொனால்டோ அவரது Instagram பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபிய அணியில் அந்நாட்டின் அல் நாசர் குழுவையும் அல் ஹிலால் குழுவையும் சேர்ந்த விளையாட்டாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் ரொனால்டோவும் ஒருவர்.
PSG அணிக்காக ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தார் காற்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி.
ரொனால்டோ முதல் பாதியில் 2 கோல்களைப் போட்டார்.
ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை PSGயின் எம்பாப்பே கோலாக்கினார்.
போட்டியில் தோல்வியுற்றாலும் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார் ரொனால்டோ.
"மீண்டும் களத்தில் இறங்கி விளையாடியதில் பேரின்பம். எதிரணியில் இருந்த பழைய நண்பர்கள் சிலரைக் கண்டதிலும் மகிழ்ச்சி" என ரொனால்டோ அவரது Instagram பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : AGENCIES