Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சவுதி அரேபியாவில் கோர விபத்து : மதினா சென்ற இந்தியப் பேராளர் குழு

வாசிப்புநேரம் -
சவுதி அரேபியாவில் கோர விபத்து : மதினா சென்ற இந்தியப் பேராளர் குழு
படம்: X/@IndianEmbRiyadh
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளைப் பார்வையிட இந்தியப் பேராளர் குழு மதினா சென்றுள்ளது.

விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த 45 யாத்ரீகர்கள் மாண்டனர்.

இந்தியப் பேராளர் குழுவுக்கு ஆந்திரப் பிரதேச ஆளுநர் தலைமையேற்றுள்ளார் என்று தெலங்கானா டுடே (Telangana Today) ஊடகம் கூறியது.

மாண்ட யாத்ரீகர்களின் இறுதிச் சடங்கில் பேராளர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இப்போதைக்கு மாண்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.

DNA மரபணுச் சோதனையை மேற்கொள்ள ஏதுவாக மாண்டவர்களின் குடும்பத்தினரும் மதினா சென்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து மாதிரிகளைச் சேகரிக்கும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது.

மாண்டவர்களின் உடல்கள் கட்டங்கட்டமாகக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்