எரிமலையிலிருந்து மீட்கப்பட்ட சிங்கப்பூரர்கள் நாடு திரும்புகின்றனர்
AFP/BNPB
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட சிங்கப்பூரர்கள் இன்று (10 மே) நாடு திரும்புகின்றனர்.
மொத்தம் 7 பேர்.
வட மலுக்கு (Maluku) மாநிலத்தில் உள்ள டுக்கோனோ (Dukono) எரிமலை நேற்று முன்தினம் (8 மே) வெடித்தது.
அப்போது அங்கு 20 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள்.
மற்றவர்கள் இந்தோனேசியர்கள்.
20 பேரில் 17 பேரை அதிகாரிகள் காப்பாற்றினர்.
காணாமல்போன மூவரைத் தேடும் பணியில் அவர்கள் இறங்கினர்.
இந்தோனேசியர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள் இருவரை இன்னும் காணவில்லை.
எரிமலைப் பள்ளத்திலிருந்து 20 - 30 மீட்டர் தூரத்தில் அவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் மீது காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
அடிக்கடி வெடிக்கும் டுக்கோனோ எரிமலையில் ஏற 2024ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.