Skip to main content
"இவ்வளவு பெரிய கூட்டமா?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

"இவ்வளவு பெரிய கூட்டமா?" - மகா கும்பமேளாவில் சிங்கப்பூரர்களின் அனுபவம்

வாசிப்புநேரம் -
வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடைசி நாளை எட்டுகிறது.

ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய அம்மாபெரும் விழா நாளை (26 பிப்ரவரி) நிறைவடையவுள்ளது.

144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளாவில் உலகம் முழுதுமிருந்து பல மில்லியன் பேர் கலந்துகொண்டுள்ளனர்.
 
(படம்: KULKARNI / AFP)

சிங்கப்பூரர்கள் சிலரும் மகா கும்பமேளாவுக்குச் சென்றுவந்தனர்.

அவர்களில் அவி டிக்க்ஷிட், பிரியங்கா ஆகிய 2 இளையர்களிடம் பேசும் வாய்ப்பு "செய்தி"க்குக் கிடைத்தது.

அவர்கள் அனுபவத்தைப் பகிர்ந்தபோது..

"பதற்றம் இல்லை ஆனால்..."

கும்பமேளாவுக்குச் செல்லும் முன் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அம்மாவிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாகக் கூறினார் அவி. நிறையத் தகவல்களைப் படித்தும் தெரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.

இதனால் பதற்றம் ஏற்படவில்லை; மாறாக ஆர்வம் மிகுதியாய் இருந்ததாக அவி கூறினார்.

"இவ்வளவு பெரிய கூட்டமா?..."

கும்பமேளாவில் கூட்டம் அதிகமிருக்கும் என்று தெரியும். ஆனால் அது எவ்வளவு பெரிய கூட்டம் என்பதை நேரில் பார்த்தபோதுதான் உணர்ந்ததாக அவர் சொன்னார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிருந்த வரிசை விளக்குகளும் கூடாரங்களும் திரிவேணி சங்கமத்தை இன்னும் அழகாகக் காட்டியதாக அவி தெரிவித்தார்.

(படம்: Punit PARANJPE / AFP)
"திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுந்த தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது,"

என்றார் அவர் பெருமிதத்துடன்.

"குளிரைத் தாங்க முடியவில்லை....."

பிரயாக்ராஜில் இன்றைய நாள் 16 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவுகிறது என்றார் பிரியங்கா.
 
(படம்: Niharika KULKARNI / AFP)
"ஆனால் குளிரை மக்கள் பொருட்படுத்தவில்லை. திரிவேணி சங்கமத்துக்கு அதிகாலை 3 மணிக்கே மக்கள் வரத்தொடங்கிவிட்டனர்,"
என்றார் அவர்.
"திரிவேணி சங்கமத் தண்ணீர்தான் மக்களின் நினைவுப்பொருள்..."
(படம்: Punit PARANJPE / AFP)
சங்கமத்தில் புனித நீராடலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் போத்தல்களில் நீரை எடுத்துச்செல்கின்றனர். சிலர் 5 லிட்டர் அளவு போத்தல்களில் நீரை நிரப்புகின்றனர். சங்கமத்திலிருந்து எடுத்துச்செல்லும் ஒரே நினைவுப்பொருள் அந்தத் தண்ணீர்தான் என்றார் பிரியங்கா.
(படம்: Niharika KULKARNI / AFP)
அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டு நிலைமையைக் கண்காணிப்பதைப் பார்க்கமுடிவதாகப் பிரியங்கா சொன்னார்.
(படம்: Niharika KULKARNI / AFP)
பல்வேறு மொழி பேசும் மக்கள் ஓரிடத்தில் கூடி மகா கும்பமேளாவைக் கொண்டாடும் தருணத்தை நேரில் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகக் கூறிய அவர் நீரில் மூழ்கி எழுந்தபோது அமைதியான உணர்வு கிடைத்தது என்றார்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்