Skip to main content
கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு - "தெரியாமல் நடந்துவிட்டது"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென் கொரியாவில் கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 29 பேர் காயம் அடைந்தனர். பெருத்த சேதம் ஏற்பட்டது.

அதன் தொடர்பில் 2 ஆகாயப்படை விமானிகள் மீது குற்றச்டாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ராணுவப் பயிற்சியின்போது அந்த அசம்பாவிதம் நடந்தது.

அந்த இரண்டு விமானிகளும் விமானங்களின் கட்டமைப்பில் தவறான செய்தியைப் பதிவிட்டதால் குண்டுகள் பாய்ச்சப்பட்டதைத் தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.

விசாரணை தொடர்கிறது.

2 போர் விமானங்களிலிருந்து 8 வழிகாட்டி இல்லாத குண்டுகள் பொசியோனில் (Pocheon) உள்ள கிராமத்தில் விழுந்தன.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்