Skip to main content
தென்கொரியப் பங்குச் சந்தையில் பதற்றம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென்கொரியப் பங்குச் சந்தையில் பதற்றம்

வாசிப்புநேரம் -
ஈரான் போர் காரணமாகத் தென்கொரியப் பங்குச் சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இரு முக்கிய குறியீடுகளான Kospi, Kosdaq 8 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்தன.

அதனால் பங்குப் பரிவர்த்தனை சற்று நேரம் நிறுத்தப்பட்டது.

2024 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆக மோசமான வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

தென்கொரிய வோன் (Won) நாணயத்தின் மதிப்பு 17 ஆண்டில் ஆக மோசமான சரிவைக் கண்டது.

1 அமெரிக்க டாலருக்கு நிகரான அதன் மதிப்பு 1,500 வோன்னாக இறங்கியது.

உலகளவில் எண்ணெய் இறக்குமதியில் தென்கொரியா 4ஆம் இடத்தில் உள்ளது.

அதன் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 70 விழுக்காடு மத்தியக் கிழக்கிலிருந்து வருகிறது.

ஜப்பானிலும் Nikkei, Topix குறியீடுகள் இறங்குமுகமாக இருந்தன.

Nikkei மதிப்பு 3.5 விழுக்காடு குறைந்தது.

சென்ற மாதம் 6ஆம் தேதி முதல் அதுவே Nikkeiஇன் ஆக மோசமான சரிவு.

Topix குறியீடு சுமார் 3.7 விழுக்காடு இறங்கியது.

 
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்