நேட்டோ கூட்டணியில் ஃபின்லந்து, சுவீடன் - ஆக்ககரமான கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை: துருக்கிய அதிபர்
ஃபின்லந்தும் (Finland) சுவீடனும் (Sweden) நேட்டோ கூட்டணியில் சேர்வதுபற்றி ஆக்ககரமான கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை என்று துருக்கிய அதிபர் ரிசப் தயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) கூறியுள்ளார்.
சுவீடனுக்கும், ஃபின்லந்துக்கும் நேட்டோ கூட்டணியின் பெரும்பாலான உறுப்புநாடுகளிலிருந்து பலதரப்பட்ட ஆதரவு கிட்டியிருக்கிறது.
இரு நாடுகளிலும் பயங்கரவாத அமைப்புகள் அதிகம் இருப்பதால் அவற்றின் உறுப்பினர் நிலையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அதிபர் எர்துவான் கூறினார்.
பயங்கரவாத இயக்கங்கள் எனத் துருக்கி கருதும் அமைப்புகளைச் சரிவர கையாளவில்லை என்று இதற்கு முன்னதாக சுவீடனையும் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் அது குறைகூறியிருக்கிறது.