ரஷ்யாவின் மாபெரும் தாக்குதல் - உக்ரேனில் மின்சாரத் தடை
This audio is generated by an AI tool.
உக்ரேன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலால் அங்குப் பெரிய அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
இருதரப்புக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா சமரசப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் வேளையில் ரஷ்யா அதன் தாக்குதல்களை நிறுத்துவதாக இல்லை.
உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பைக் குறிவைத்து வேண்டுமென்றே ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதனால் விளக்குகள், வெப்பமூட்டும் வசதிகள் ஆகியவை இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.
உக்ரேனில் தற்போது பனிக்காலம்.
தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் உள்ளது.
பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டதும் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று உக்ரேன் தெரிவித்தது.