உக்ரேனிய அரசாங்க இணையப்பக்கங்கள் ஊடுருவல்
உக்ரேனின் அரசாங்க இணையப்பக்கங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய விவகாரம் குறித்து ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில், அந்த ஊடுருவல் நடந்துள்ளது.
நேற்றிரவு தனது இணையப்பக்கம் ஊடுருவப்பட்டதாக, உக்ரேனியக் கல்வி அமைச்சு Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
அந்நாட்டின் வெளியுறவு, அவசரநிலை அமைச்சுகள், அமைச்சரவை ஆகியவற்றின் இணையப்பக்கங்கள் செயலிழந்தன.
அந்த இணையத் தாக்குதலுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.