Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் காட்டுத்தீ - பொதுச் சுகாதார நெருக்கடி அறிவிப்பு

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) வட்டாரத்தில் பொதுச் சுகாதார நெருக்கடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு காட்டுத்தீ தொடர்ந்து பரவுகிறது.

குறைந்தது11 பேர் மாண்டுவிட்டனர்.

மாண்டோர் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

153,000க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சூறையாடல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் Palisades, Eaton பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

greater Los Angeles வட்டாரத்தில் குடியிருப்பாளர்களுக்குத் தவறுதலாக வீடுகளிலிருந்து வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்தத் தொழில்நுட்பக் கோளாற்றுக்கு அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.

இதுவரை 8,000க்கும் மேற்பட்ட ஹெக்டர் நிலம் எரிந்துவிட்டது.

5,300 கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன.
 
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்