அதிகரித்த குரங்கம்மைப் பரவல் - அமெரிக்காவில் நெருக்கடி நிலை அறிவிப்பு
அமெரிக்கா, குரங்கம்மைப் பரவல் தொடர்பாக சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
சின்னம்மையுடன் தொடர்புடைய அந்தக் கிருமியின் பரவல் இந்த ஆண்டு வரை ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு உள்ளேயே பெரும்பாலும் இருந்தது.
அங்கு குரங்கம்மை நிரந்தர நோயாக நீடிக்கிறது.
ஆனால், நியூயார்க் நகரம் தற்போது உலக அளவில் குரங்கம்மைப் பரவல் மையமாக உருவெடுத்துள்ளது.
வேகமாகப் பரவி வரும் குரங்கம்மைக் கிருமிக்கு ஈடுகொடுக்க சிகிச்சை முறைகள் விரைவாக உருவாக்கப்படவில்லை.