தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பின்னேரத்தில் தென் கொரியாவுக்குச் செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை அவர் ஜப்பானுக்குப் போகிறார்.
அதிபராகப் பொறுப்பேற்றபின் திரு. பைடன் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் அது.
ஆசியாவில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்த அவர் முனைகிறார்.
அத்துடன் சுதந்திரமான, தடையற்ற இந்தோ-பசிபிக் வட்டாரத்தை உறுதிசெய்யும் பைடன் நிர்வாகத்தின் நோக்கத்தையும் அவர் முன்வைப்பார்.
அவரது வருகையின்போது வட கொரியா அணுவாயுதச் சோதனையை நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
எந்த நேரத்திலும் அணுவாயுதச் சோதனையை நடத்த வட கொரியா தயாராய் இருப்பதாகத் தென் கொரிய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
அணுவாயுத நாடான வட கொரியா, வட்டாரத்தின் பாதுகாப்புக்கு விடுக்கும் மிரட்டல் குறித்தும் திரு. பைடனின் வருகையின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-Agencies