மத்திய கிழக்கில் சிக்கிக்கொண்ட மக்கள் - உலக நாடுகளின் நடவடிக்கை?
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிங்கப்பூர் உள்ளிட்ட பல உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுத்துவருகின்றன.
அவை என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத் தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.
சிங்கப்பூர்
➡️உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களைக் கண்டுபிடிக்க வெளியுறவு அமைச்சு கருத்தாய்வு நடத்தியது.
➡️4 வழிகள் ஆலோசிக்கப்படுகின்றன.
➡️மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூரர்கள் அமைச்சின் இணையத் தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்.
மலேசியா
➡️மத்திய கிழக்கில் வேலை செய்யும் 29,000க்கும் மேற்பட்ட மலேசியர்களைக் கொண்டுவர மலேசியா திட்டமிடுகிறது.
➡️அங்குள்ள தூதரகங்களுடன் வெளியுறவு அமைச்சு ஒத்துழைத்துவருகிறது.
இந்தியா
➡️வளைகுடா நாடுகளிலுள்ள தூதரகங்களுடன் இணைந்து பாதுகாப்பான விமானப் பயண ஏற்பாடுகள் செய்வது பற்றி இந்தியா ஆலோசித்துவருகிறது.
இந்தோனேசியா
➡️தெஹ்ரானிலிருந்து அஸர்பைஜான் (Azerbaijan) வழியாக தனது மக்களை வெளியேற்ற இந்தோனேசிய முயற்சி செய்கிறது.
➡️அது 10 மணி நேரப் பயணம்.
இலங்கை
➡️மத்திய கிழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு இலங்கை இலவச 14 நாள் விசா நீட்டிப்பு வழங்குகிறது.
➡️24/7 நேரடித் தொலைபேசி எண்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து
➡️இங்கிலாந்து தனது மக்களை மத்திய கிழக்கு வட்டாரங்களிலிருந்து வெளியேற்ற முதல் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா
➡️மத்திய கிழக்கில் 115,000 ஆஸ்திரேலியர்கள் சிக்கியுள்ளனர்.
➡️அவர்களுக்கு உதவ விமான நிறுவனங்களுடன் ஆஸ்திரேலியா பேசி வருகிறது.
பிரான்ஸ்
➡️போரினால் 400,000 பிரெஞ்சு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
➡️இதுவரை "Ariane" அமைப்பில் 25,000க்கும் மேற்பட்டோர் உதவிக்காகப் பதிவுசெய்துள்ளனர்.
ஜெர்மனி
➡️மத்திய கிழக்கில் சுமார் 30,000 ஜெர்மன் மக்கள் சிக்கியுள்ளனர்.
➡️ராணுவ உதவிதான் கடைசி வழி என்று ஜெர்மனி நம்புகிறது.
இத்தாலி
➡️ஓமானில் சிக்கியுள்ள 127 இத்தாலிய மக்களை ஏற்றிச்சென்ற முதல் விமானம் மார்ச் 2ஆம் தேதி இரவு ரோமில் தரையிறங்கியது.
ஸ்பெயின்
➡️மத்திய கிழக்கிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டதாக ஸ்பெயின் தெரிவித்தது.
அமெரிக்கா
➡️மத்திய கிழக்கிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தனது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
➡️ஆனால் மக்களை மீட்டும் விமானப் பயணங்கள் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.