இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் : அதன் வரலாறு என்ன?
வாசிப்புநேரம் -

படம்: AP/Mukhtar Khan
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதி ஆகியவற்றில் 9 இடங்கள் தாக்கப்பட்டன.
குறைந்தது 38 பேர் மாண்டனர்.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் பயணிகள் மீது சென்ற மாதம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
📌இந்தியா - பாகிஸ்தான் வரலாறு?
1947ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானும் காஷ்மீருக்காகச் சண்டை போடுகின்றன.
இருதரப்பும் காஷ்மீர் தங்களுக்குச் சொந்தம் என்று கூறிவருகின்றன.
முதல் போர் 1947ஆம் ஆண்டில் நடந்தது.
இரண்டாம் போர் 1965ஆம் ஆண்டில்..
அதன் பிறகு குறைந்தது 3 போர்களும் பல்வேறு மோதல்களும் நடந்துள்ளன.
இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீருக்கும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீருக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகியவை இந்தியாவின் கீழ் வருகின்றன.
அசாத் காஷ்மீர், கில்கிட், பல்திஸ்தான் ஆகியவை பாகிஸ்தான் கீழ் வருகின்றன.
கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் இருநாடுகளுக்கும் இடையே இருந்த அரசதந்திர ஒப்பந்தங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் நடவடிக்கைகள்..
➡️ சிந்து ஆற்று நீரைப் பிரித்துக்கொள்ளும் சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து
➡️ பாகிஸ்தானுடன் உள்ள எல்லை மூடல்
பாகிஸ்தானின் நடவடிக்கைகள்..
➡️ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control) உருவாக்கிய சிம்லா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டல்
இருநாடுகளும் ஒன்று மற்றதன் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்துள்ளன.
ஆகாயவெளியை மூடியுள்ளன.
பாகிஸ்தான், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதி ஆகியவற்றில் 9 இடங்கள் தாக்கப்பட்டன.
குறைந்தது 38 பேர் மாண்டனர்.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் பயணிகள் மீது சென்ற மாதம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
📌இந்தியா - பாகிஸ்தான் வரலாறு?
1947ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானும் காஷ்மீருக்காகச் சண்டை போடுகின்றன.
இருதரப்பும் காஷ்மீர் தங்களுக்குச் சொந்தம் என்று கூறிவருகின்றன.
முதல் போர் 1947ஆம் ஆண்டில் நடந்தது.
இரண்டாம் போர் 1965ஆம் ஆண்டில்..
அதன் பிறகு குறைந்தது 3 போர்களும் பல்வேறு மோதல்களும் நடந்துள்ளன.
இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீருக்கும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீருக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகியவை இந்தியாவின் கீழ் வருகின்றன.
அசாத் காஷ்மீர், கில்கிட், பல்திஸ்தான் ஆகியவை பாகிஸ்தான் கீழ் வருகின்றன.
கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் இருநாடுகளுக்கும் இடையே இருந்த அரசதந்திர ஒப்பந்தங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் நடவடிக்கைகள்..
➡️ சிந்து ஆற்று நீரைப் பிரித்துக்கொள்ளும் சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து
➡️ பாகிஸ்தானுடன் உள்ள எல்லை மூடல்
பாகிஸ்தானின் நடவடிக்கைகள்..
➡️ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Control) உருவாக்கிய சிம்லா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டல்
இருநாடுகளும் ஒன்று மற்றதன் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்துள்ளன.
ஆகாயவெளியை மூடியுள்ளன.
ஆதாரம் : CNA