Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமிப்பரவல் குறித்து தகவல் தர மறுக்கும் சீனாவை உலகச் சுகாதார நிறுவனம் சாடியது

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவல் குறித்து தகவல் தர மறுக்கும் சீனாவை உலகச் சுகாதார நிறுவனம் சாடியது

(படம்:unsplash)

கோவிட்-19 நோய் எப்படித் தொடங்கியது என்பது குறித்து சீனா சரியாகத் தகவல் தர மறுப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜனவரி மாதத்தில் இணையத்தில் கிடைத்த தகவலைக் கொண்டு அனைத்துலக நிபுணர்கள் ஆய்வு நடத்தியதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

கோவிட்19 முதலில் விலங்குகளிடம் பரவியதாகவும் அந்த விலங்குகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டபோது அவற்றில் இருந்து மனிதருக்குத் தொற்றியதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

அந்த ஆய்வு-முடிவைச் சீனாவின் நிபுணர்களோடு பகிர்ந்து கொண்டபோது அவர்கள் இணையத்தில் இருந்த தகவலை நீக்கிவிட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

கோவிட்19 எப்படித் தொடங்கியது என்பது பற்றிய ஆதாரத்தை உலக மக்களோடு உடனே பகிர்ந்துகொள்ளும்படி உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) சீனாவைக் கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்