உலகக் கிண்ணம்: கடைசி 15 நிமிடங்களில் 3 கோல்... அர்ஜென்ட்டினா அதிரடி
IMAGN IMAGES via Reuters/Brett Davis
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்
அர்ஜென்ட்டினா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
எகிப்துடனான ஆட்டத்தில் 79வது நிமிடம் வரை ஒரு கோல் கூட போடாத அர்ஜென்ட்டினா அதிரடியாக மீண்டு வந்தது.
ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களுக்குள் 3 கோல்களைப் புகுத்தி மூன்றுக்கு இரண்டு எனும் கோல் எண்ணிக்கையில் வெற்றியடைந்தது அர்ஜென்ட்டினா.
அர்ஜென்ட்டினாவின் கடைசி கோலை என்ஸொ ஃபெர்னாண்டெஸ் (Enzo Fernandez) புகுத்தினார்.