Skip to main content
கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

வாசிப்புநேரம் -
கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காற்பந்து ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ணக் கனவு கண்ணீர் ததும்ப இன்று ஒரு முடிவுக்கு வந்தது.

காற்பந்து என்றாலே நம் நினைவுக்கு வரும் ஆட்டக்காரர்களில் ஒருவர் போர்ச்சுகலின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ.

காற்பந்தாட்டத்தை அறவே பார்க்காதவர்களுக்குக் கூட ரொனால்டோவை தெரிந்திருக்கும்.
 
Related article image
படம்: AFP
ஸ்பெயினும் போர்ச்சுகலும் இன்று அதிகாலை மோதிய ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய காற்பந்துப் (European Championship) போட்டியில், ரொனால்டோ
தமது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டியிலும் இருமுறை வென்றுள்ளார்.

ஆனால் இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.

2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் அரை இறுதிச் சுற்று வரை சென்றது அவரது அணி.
 
Related article image
படம்: AFP
"உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவது எனக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது...ஆனால் இதுதான் ஒரு காற்பந்து வீரரின் வாழ்க்கை. முடிந்த அளவு விளையாடினேன்... தெளிந்த மனசாட்சியுடன் வெளியேறுகிறேன்," என்றார் ரொனால்டோ.
Related article image
படம்:Reuters/Hannah Mckay
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்