இளையர் குரல் exclusive
Facebook... இளையர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது?
வாசிப்புநேரம் -
Unsplash
Facebook தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகிவிட்டன...
சமூக ஊடகப் பொற்காலத்தின் தொடக்கத்தில் அது வந்தது.
ஆனால் இப்போது அதற்கு வயதாகிவிட்டது என்கின்றனர் இளையர்கள்.
மூத்தோர் பயன்படுத்துவதால் பதிவுகள் சுவாரசியமாக இல்லை என்று சிலர் கூறினர்.
இளையர்களே தயாரிக்கும் பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன என்பது சிலரின் கருத்து.
வேறு தளங்களை விரும்புவதாகச் சிலர் சொல்கின்றனர்.
Facebook இளையர்களைக் கவரவில்லை என்றாலும் சமூக ஊடகத்தில் அதற்கு இன்னும் இடம் உண்டு என்று சிலர் கூறினர்.
சமூக ஊடகங்கள் பலவற்றில் ஒரே விதமான அம்சங்கள் இருந்தாலும் அதில் உள்ள பதிவுகள் மிக முக்கியம். கவரும் பதிவுகளைத் தேடிச் செல்கின்றனர் இளையர்கள். அதில் Instagram, Tiktok முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi