"தமிழில் யோசி! தமிழில் வாசி!" - வழிகாட்டுதலைப் பெறும் இளையர்கள்
This audio is generated by an AI tool.
மொழிபெயர்ப்பது...முக்கிய செய்திகளைச் சுருக்கமாக வழங்குவது...எளிமையான நடையில் நேர்காணல் நடத்துவது...
'செய்தி'யின் "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சியில் மாணவர்கள் செய்தித்துறையில் மொழிபெயர்ப்பது பற்றித் தெரிந்துகொள்கின்றனர்.
உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மாணவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.
அதில் சிறப்பாகச் செய்யும் சில மாணவர்கள் பின்னர் நடைபெறும் போட்டி அங்கத்துக்கு முன்னேறுவர்.
14 முதல் 19 வயதுவரை உள்ள மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
அவர்களில் உயர்நிலைப் பள்ளிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர்.
நிகழ்ச்சி தேசிய மொழிபெயர்ப்புக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறுகிறது.