இளையர்கள் தொண்டூழியப் பணிகள் குறித்து விவரம் பெறப் புதிய இணையத்தளம்
வாசிப்புநேரம் -
படம்: Youth Corps Singapore
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் இளையர் படை அடுத்த பத்தாண்டுக்கான தனது இலக்கை இன்று அறிவித்துள்ளது.
பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்களைத் தொண்டூழியப் பணிகளில் ஈர்த்து வட்டார அளவிலான தொண்டூழிய வாய்ப்புகளை அதிகரிக்க அது எண்ணுகிறது.
தொண்டூழியப் பணிகள் குறித்துக் கூடுதல் விவரம் பெறவும் ஒருவர் எத்தனை மணிநேரம் அறப்பணி செய்துள்ளார் என்பதைக் கணக்கிடவும் உதவும் புதிய இணையத்தளத்தை இளையர் படை அமைத்துள்ளது.
இணையத்தளம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்ற ஆண்டு இளையர் படையின் தலைமைத்துவத் திட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 200 இளம் தலைவர்களை நிகழ்ச்சி அங்கீகரித்தது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்களைத் தொண்டூழியப் பணிகளில் ஈர்த்து வட்டார அளவிலான தொண்டூழிய வாய்ப்புகளை அதிகரிக்க அது எண்ணுகிறது.
தொண்டூழியப் பணிகள் குறித்துக் கூடுதல் விவரம் பெறவும் ஒருவர் எத்தனை மணிநேரம் அறப்பணி செய்துள்ளார் என்பதைக் கணக்கிடவும் உதவும் புதிய இணையத்தளத்தை இளையர் படை அமைத்துள்ளது.
இணையத்தளம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்ற ஆண்டு இளையர் படையின் தலைமைத்துவத் திட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 200 இளம் தலைவர்களை நிகழ்ச்சி அங்கீகரித்தது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஆதாரம் : Others