Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"பிழையின்றி எழுதவும், பிறர் முன் தைரியமாகப் பேசவும் கற்றுக்கொண்டோம்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இளையர்களிடையே தமிழ்மொழி மீதுள்ள
ஆர்வத்தை எப்படி அதிகரிப்பது?

பிழைகளை எப்படிக் குறைத்துக்கொள்ளலாம்? பிறர் முன் தைரியமாக நின்று பேசுவது எப்படி?

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மேடைப்பேச்சு, எழுத்துத்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்காகச் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றமும் டெக் கீ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து பயிலரங்கு ஒன்றை நடத்தின.

"தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி சென்ற மாதம் (மார்ச் 2025) 29ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

சுவாரஸ்யமான விளையாட்டுகள்...புதிர்கள், கலாசார
அம்சங்கள்....சிந்தனையைத் தூண்டும் அங்கங்கள், இப்படிப் பலவற்றைக் கொண்டிருந்தது நிகழ்ச்சி.

பயிலரங்கு தங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது என்றும் இது போன்ற பயிலரங்குகளில் கலந்துகொள்ள் ஆர்வமாக இருப்பதாகவும் இளையர்கள் சிலர் 'செய்தி'யிடம் கூறினர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்