புக்கிட் தீமா குடியிருப்பாளர்கள் வீடுகளில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Lauren Chian)
புக்கிட் தீமா குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன.
அண்மையில் வெளிநாட்டினர் மூவர் அங்கு வீடுபுகுந்து கொள்ளை அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை ஒலியுடன் கூடிய கண்காணிப்புக்
கேமராக்களைப் பொருத்திக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டது.
வீடுகளில் விலை மதிப்புள்ள பொருள்களை வைத்திருக்க வேண்டாம் என்றும் வட்டாரவாசிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
விசாரணையில் உதவ அந்த 3 வெளிநாட்டவர்களை காவல்துறை அதிகாரிகள் நேற்று (14 மே) சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சுமார் 700,000 வெள்ளி மதிப்புள்ள நகை, சொகுசுக் கைக்கடிகாரங்கள், பணம் ஆகியவற்றை திருடியதாக நம்பப்படுகிறது.
அந்த மூவர் மீதும் வீடுபுகுந்து களவாடியதாகக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
அவர்கள் வரும் திங்கட்கிழமை (19 மே) நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அண்மையில் வெளிநாட்டினர் மூவர் அங்கு வீடுபுகுந்து கொள்ளை அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை ஒலியுடன் கூடிய கண்காணிப்புக்
கேமராக்களைப் பொருத்திக்கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டது.
வீடுகளில் விலை மதிப்புள்ள பொருள்களை வைத்திருக்க வேண்டாம் என்றும் வட்டாரவாசிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
விசாரணையில் உதவ அந்த 3 வெளிநாட்டவர்களை காவல்துறை அதிகாரிகள் நேற்று (14 மே) சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சுமார் 700,000 வெள்ளி மதிப்புள்ள நகை, சொகுசுக் கைக்கடிகாரங்கள், பணம் ஆகியவற்றை திருடியதாக நம்பப்படுகிறது.
அந்த மூவர் மீதும் வீடுபுகுந்து களவாடியதாகக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
அவர்கள் வரும் திங்கட்கிழமை (19 மே) நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
ஆதாரம் : CNA