கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம் - பக்தர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

படம்: ஷரளா
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான கோயில்களில் ஒன்று. இதன் வரலாறு 1800களில் தொடங்கியது.
1868ஆம் ஆண்டு டோபி காட்டில் (Dhoby Ghaut) அமைக்கப்பட்ட இந்தக் கோயில் பின்னர் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2க்கு மாற்றப்பட்டது.
கோயிலில் முதல் கும்பாபிஷேகம் 1993இல் நடைபெற்றது.
கடைசியாக 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அடுத்து வரும் ஜூன் 8ஆம் தேதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகம் காணவுள்ள சிவன் கோயிலில் என்னென்ன சிறப்புகள் உள்ளன, பொதுமக்களும் பக்தர்களும் என்ன எதிர்பார்க்கலாம்? விவரமளித்தது ஆலயத்தை நிர்வகிக்கும் இந்து அறக்கட்டளை வாரியம்.
'அன்பே சிவம்' புத்தகம்...

🪔கோயில் வரலாறு, அதிலுள்ள சிற்பக் கலைகள் பற்றி எடுத்துக்கூறும் 'அன்பே சிவம்' என்ற சிறப்புப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
🪔பொதுமக்கள் இன்று முதல் புத்தகத்தை 15 வெள்ளிக்குக் கோயிலில் வாங்கலாம்.
🪔ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் விவரங்கள் கொண்ட அப்புத்தகம் மொத்தம் 150 பக்கங்களைக் கொண்டிருக்கிறது.
கோயில் மறுசீரமைப்பு.....
🛕வழிபாடுகள், விழாக்கள், சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய இடங்களும் வளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
🛕ஸ்தபதி திரு எஸ் நாகராஜன் தலைமையில் சிற்பக் கலைகள் மறுசீரமைக்கப்பட்டன. 1993இல் ஆலயம் கேலாங் ஈஸ்ட்டுக்கு மாற்றப்பட்டபோது சிற்ப வேலைகளைச் செய்த பெருமை இவரைச் சேரும்.



🛕மரத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பழைய கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டன.


🍛மகா கும்பாபிஷேக நாளில் சுமார் 20,000 பேருக்கு அன்னதானம் வழங்க ஆலய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
🍛அன்னதானம் கேலாங் ஈஸ்ட் செண்ட்ரலுக்கும் (Geyland East Central) அல்ஜூனிட் அவன்யூ 1க்கும் (Aljunied Ave 1) இடையே உள்ள திறந்தவெளியில் நடைபெறும்.